Friday, 17th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய கையெழுத்து இயக்கம் நடந்தது.
தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தலித் இயக்கங்கள் சார்பில், பட்டியிலின மக்களுக்கு பொதுசொத்தில் உரிமைகள் வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.
நிலம் அல்லாத பட்டியலின பழங்குடி மக்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். இருக்கும் நிலத்தை பிற சமூகத்தினர் பறிப்பதை தடுத்திட வேண்டும்.
அரசுதுறையில் இடஒதுக்கீட்டை முழுமையாக அமலாக்க வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீட்டை கட்டாயாக்க வேண்டும்.
எஸ்.சி.,எஸ்.டி.,வன்கொடுமை தடுப்பு சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும். சாதி ஆவணப்படுகொலையை தடுத்திட தனிசிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தலித் இயக்கங்கள் சார்பில் கடந்த அக்.25 முதல் வரும் நவ.17 வரையில் நாடுதழுவிய அளவில் கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி எலச்சிபாளையம் பஸ்நிறுத்தத்தில் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. தி.மு.க
மாணவரணி அமைப்பாளர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் பாண்டியன், சந்திரன், கொடியரசுதேவன், ஆனந்தன், சாமிநாதன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.